951 கிலோ கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை.

by Editor / 05-09-2024 03:50:26pm
951 கிலோ கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை.

மதுரை எஸ்.எஸ்.காலணி பகுதியில் 2023 ஆம் ஆண்டு 951 கிலோ கஞ்சா கட்டத்தப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 1 ஆவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிஹரகுமார் முன்னிலையில் நடைபெற்றது.இவ்வழக்கில் தொடர்புடைய பிரபாகரன், செந்தில் பிரபு, ராஜ்குமார், ஜெயக்குமார் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 இலட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.

 

Tags : 951 கிலோ கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை.

Share via