கர்நாடகா 2 மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்.

கர்நாடகாவின் குடகு, சிக்கமகளூரு, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூரு, குடகு, உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது. பருவமழை மே 27ஆம் தேதி கேரளாவிலும், மே 30 அல்லது 31ஆம் தேதி கர்நாடகாவிலும் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை சராசரி 87 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : கர்நாடகா 2 மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்.