ஒகேனக்கல் வனப்பகுதியில் கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு.

by Editor / 21-05-2025 09:25:04am
 ஒகேனக்கல் வனப்பகுதியில்  கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதியில் பொழியும் கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. பருவமழை தொடங்கும் முன்பே கர்நாடகாவில் மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து காலை 8,000 கன அடியாக இருந்த நிலையில் மாலை 10,000 கன அடியாக உயர்ந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 

Tags : ஒகேனக்கல் வனப்பகுதியில் கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு.

Share via