பள்ளி உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு

by Staff / 15-07-2023 03:56:23pm
பள்ளி உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் அங்கு மதிய உணவு உட்கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 மாணவர்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.0.2

 

Tags :

Share via