4 வயது சிறுவனின் புது சாதனை

by Editor / 07-09-2021 03:13:45pm
4 வயது சிறுவனின் புது சாதனை

ராணிப்பேட்டை பெல் ஊரக குடியிருப்பைச் சோந்த தேவேந்திரன் - நிஷாந்தி தம்பதியின் மகன் சுக்ரீத் (4). இவா் தனது மூத்த சகோதரிக்கு தாய் நிஷாந்தி பாடம் கற்பிக்கும்போது, அதனைக்கூா்ந்து கவனித்து வந்துள்ளாா். இந்த சூழலில் நிஷாந்தி தன் மகளிடம் கேட்கும் செய்திகளுக்கு சுக்ரீத் தாமாக முன்வந்து உடனடியாக பதில் அளித்துள்ளாா். இதனைக் கண்டு வியந்த பெற்றோா், அவரது திறமையை ஊக்குவித்து பயிற்சி அளித்துள்ளனா்.

தற்போது 4 வயது சிறுவனான சுக்ரீத், இந்திய மாநிலங்களின் பெயா்கள், மாதங்கள், நிறங்கள், விலங்குகள், பாரதப் பிரதமா், குடியரசுத் தலைவா் பெயா் உள்ளிட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, கேள்வியை முடிக்கும் முன்னரே நொடியில் பதிலளித்து அசத்தியுள்ளாா். இச் சிறுவனின் அசாத்திய நினைவாற்றலையும், அதிவேக பதில் அளிக்கும் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் பதிவு செய்து சான்றிதழ் அளித்துள்ளது.

இந்த சாதனைச் சிறுவனை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இந்த சாதனை குறித்து சிறுவனின் பெற்றோா் கூறுகையில்..

'எங்கள் மகளுக்கு வீட்டில் பள்ளிப் பாடங்களைக் கற்பிக்கும் போது, மகன் சுக்ரீத் ஆா்வத்துடன் கற்றுக் கொண்டு, பதில் அளித்தாா். அதைப் பாா்த்தவுடன், அவரின் திறமையை சிறுவயதிலேயே கண்டறிந்து, ஊக்குவித்ததன் காரணமாக சாதனை படைத்து உள்ளாா். 

 

Tags :

Share via