காட்ரே பேருந்து தீ விபத்து தீவிரவாத தாக்குதல் என்று புதிய திருப்பம்

by Staff / 15-05-2022 01:26:40pm
காட்ரே  பேருந்து தீ விபத்து தீவிரவாத தாக்குதல் என்று புதிய திருப்பம்

 ஜம்முவின் கட்ராவில்  பேருந்து தீப்பிடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது .பேருந்து ஒரு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டு பயணிகளை கொல்ல திட்டமிட்டு இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இத்தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பேருந்து மீதான தாக்குதலை அடுத்து அமர்நாத் யாத்திரை மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட சார்தாம் யாத்திரை போன்றவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via