நாளை முதல் இந்தியாவில் 3 குற்றவியல் சட்டங்கள் அமல்.

by Staff / 30-06-2024 12:48:13pm
நாளை முதல் இந்தியாவில் 3 குற்றவியல் சட்டங்கள் அமல்.

இந்தியாவில் நாளை(ஜூலை 1) முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வர இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்பால் தெரிவித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் (1860), இந்திய சாட்சியச் சட்டம் (1872) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1973) ஆகியவற்றுக்குப் பதிலாக இந்தியச் சட்டக் குறியீடு, இந்திய குடிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் ஆகியவை நடைமுறைக்கு வர இருக்கின்றன. தற்போதைய சூழலுக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via