ஐடெக் விபச்சாரம் நடத்திய பெண்கள்.. தட்டித்தூக்கிய போலீஸ்!

by Staff / 03-08-2024 11:48:07am
ஐடெக் விபச்சாரம் நடத்திய பெண்கள்.. தட்டித்தூக்கிய போலீஸ்!

சென்னை வளசரவாக்கம் மற்றும் காரம்பாக்கம் பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிரடியாக அங்கு சென்ற போலீசார் பாலியல் தொழில் நடத்தி வந்த கஸ்தூரி (53) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும், 3 இளம் பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில், நல்ல வேலை கொடுப்பதாக விளம்பரம் கொடுத்து இளம் பெண்களை வரவழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்தது தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via