நெல்லையிலிருந்து சென்னைக்கு பறக்கப்போகுது வந்தே பாரத் 

by Editor / 24-09-2023 11:19:09am
நெல்லையிலிருந்து சென்னைக்கு பறக்கப்போகுது வந்தே பாரத் 

நெல்லை - சென்னை உட்பட நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் இயங்கும் 'வந்தே பாரத்' ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இந்த வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும், வாரத்தில் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்திலும் இந்த ரயில் நின்று செல்ல கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags : நெல்லையிலிருந்து சென்னைக்கு பறக்கப்போகுது வந்தே பாரத் 

Share via