புதிய ஆளுநர் நியமனம்? ஜி.ராமகிருஷ்ணன் .

by Editor / 11-09-2021 02:17:45pm
புதிய ஆளுநர் நியமனம்? ஜி.ராமகிருஷ்ணன் .

சென்னை குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திரிபுராவில் கடந்த 8ம் தேதி வேலைகொடு என பாஜக அரசை நோக்கி மக்கள் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை காரணமாக வைத்து பாஜக, மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூரையாடி வாகனங்களுக்கு தீ வைத்து உள்ளனர் இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,

திரிபுராவில் பாஜக வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதாகவும், மேற்கு வங்கத்தில் வாய் திறக்கும் மத்திய அரசு திரிபுராவில் வாய் திறக்காமல் இருப்பதாகவும் இதனை கண்டித்தே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், வரும் 27ம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய முழு அடைப்பு செய்ய இருப்பதாகவும், பாஜக அல்லாத மாநிலங்களை சீர்குலைக்கவே புதிய ஆளுநர்களை பாஜக நியமித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர் தமிழகத்திற்கு வந்துள்ள புதிய ஆளுநர் தமிழ்நாட்டிற்க்கு எதிராக செயல்பட கூடாது என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

 

Tags :

Share via