விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை

by Editor / 22-09-2023 10:59:43pm
 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை

லேண்டர்,ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சந்திரயான்-3’ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து ‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. Sleep Mode நிலையில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்தவித தொடர்பும் பெறமுடியவில்லை என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இருப்பினும் முயற்சிகள் தொடர்வதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Tags : ரோவரிடம் முயற்சிகள் தொடர்வதாக இஸ்ரோ

Share via