ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி: பாராட்டுக்கள் குவிகின்றன 

by Editor / 25-09-2021 04:59:36pm
ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி: பாராட்டுக்கள் குவிகின்றன 



 ஐஏஎஸ் தேர்வில் 750ஆம் இடத்தைப் பிடித்த மாற்றுத் திறனாளியான ரஞ்சித்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வின் மூலமாக மட்டுமே இந்திய ஆட்சிப் பணியின் உயர் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த தேர்வில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதில், பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜக்ராதி அவஸ்தி என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், அங்கிதா ஜெயின் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.வெற்றிபெற்ற 761 பேரில் 263 பேர் பொது அல்லது ஓபன் கோட்டாவில் வென்றவர்கள் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினர் (EWS) 86 பேரும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC) 229 பேரும், எஸ்சி பிரிவிலிருந்து 122 பேர், எஸ்டி பிரிவிலிருந்து 61 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


.இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற்ற 761 பேரில், தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித் 750ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவர் ரஞ்சித், பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளி ஆவார். அவரது தாயார் வாசிப்பதை வைத்தே அவர் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். முதன்முதலாக அவர் யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்ட நிலையில், அதிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

Tags :

Share via