தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12,000ஐ தாண்டியது
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 12,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 37ஆயிரத்து 711ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 89,428 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 7,583பேர் ஆண்கள், 5,067பேர் பெண்கள், 2 பேர் திருநங்கைகள். தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.நேற்று மட்டும் 59 பேர் உயிரிழந்துள்ளார். 39பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 210 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,317ஆக அதிகரித்துள்ளது. 7,526பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,34,966ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :