சண்டிகரில் பள்ளியில் மரம் விழுந்து மாணவர் உயிரிழப்பு
பஞ்சாப் தலைநகர் சண்டிகர் செக்டார் 9 பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மதிய உணவு வேளை நேரத்தில் மைதானத்தில் ஏராளமான மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பெரிய மரம் ஒன்று மாணவர்கள் மீது திடீரென விழுந்தது. இதில், மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :