மதமாற்ற வழக்கில் 9 பேர் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத மாற்றம் செய்த வழக்கில் 42 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏழை மற்றும் பழங்குடியின மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உ.பி., மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும், சமய நூல்கள், பிரசாரப் பொருட்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி குற்றவாளிகளை கைது செய்தனர்.
Tags :