பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை

by Staff / 15-05-2022 04:33:24pm
 பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை

கள்ளக்குறிச்சி அருகே பிறந்த நாள் பார்ட்டிக்காக நண்பன் நாள் அழைத்துச்செல்லப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கீரனுர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மகன் கோகுல் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு 7 மணிக்கு கோகுல்  வீட்டுக்கு வந்த உடன் படிக்கும் மாணவன் ஒருவன் பிறந்த நாள் பார்ட்டி என கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் கோகுல் வீடு திரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது இந்த நிலையில் அதிகாலை திருக்கோவிலூர் அருகே கை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார் சம்பவம் தொடர்பாக கூகுளே அழைத்துச்சென்ற மாணவனை பிடித்து  போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories