மின்சாரம் தாக்கியதில் மாணவி பலி

by Staff / 02-01-2023 02:06:51pm
மின்சாரம் தாக்கியதில் மாணவி பலி

மதுரை மாவட்டம் கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகள் கார்த்திகை செல்வி (12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.காளிமுத்து சின்ன உலகாணி கிராமத்தில் தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி உள்ளார். கட்டிட பணி முழுமை பெறாத நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக மின் வயரை சொருகியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகை செல்வி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.இதையடுத்து மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via