புகைப்படம் எடுக்கும்போது உயிரிழந்த போட்டோகிராபர் - ரூ.5 லட்சம் நிவாரணம்

by Staff / 02-01-2023 02:22:22pm
புகைப்படம் எடுக்கும்போது உயிரிழந்த போட்டோகிராபர் - ரூ.5 லட்சம் நிவாரணம்

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்பட கலைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீ ரங்கம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், 'தி இந்து' பத்திரிகையின் மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் (56) புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை பரிசோதித்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இன்று காலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளதோடு, ரூ.5 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via