உணர்வுகளை மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா? - சி.விஜயபாஸ்கர் கேள்வி
"தலைமை என்பது அதிகாரமோ ஆணவமோ அல்ல, அது அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு" என உட்கட்சி விவகாரத்தை மறைமுகமாக சாடி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார். தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை மக்களின் மனதை வெல்ல முடியாது என்றும், உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக தலைமைக்கு எதிராக அவர் வெளியிட்டுள்ள இப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















