அதிகரித்து வரும் ஒமிக்ரான்

by Editor / 06-12-2021 03:26:44pm
அதிகரித்து வரும் ஒமிக்ரான்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஒருவர் உட்பட இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியானதாக்க தகவல் வெளியான நிலையில் தான்சானியாவில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.மொத்தம் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மேல் பகுப்பாய்வுக்காக சிலருடைய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேலும் ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via