இரங்கல் வீட்டுக்கு சென்றவர் வீட்டில் 6 பேர் தற்கொலை

by Editor / 06-12-2021 03:40:41pm
இரங்கல் வீட்டுக்கு சென்றவர் வீட்டில் 6 பேர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பன்ஜோரன் பகுதியிலுள்ள கலியாஹேதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ்லால் பன்ஜாரா. கம்பளம் மற்றும் துணி விற்கும் தொழில் செய்யும் இவருக்கு திருமணமாகி 7 பெண் குழந்தைகள் உள்ளனர். சிவ்லாலுக்கும் அவரது மனைவி பத்மாதேவிக்கும்(40) இடையே அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் பக்கத்து கிராமத்திலுள்ள அவருடைய உறவினர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த இரங்கல்  நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள சனிக்கிழமை இரவு கிளம்பிச்சென்றுள்ளார் சிவ்லால். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பத்மாதேவி தனது குழந்தைகளான சாவித்ரி(14), அன்காலி(8), காஜல்(6), குஞ்சன்(4) மற்றும் அர்ச்சனா(1) ஆகிய 5 பேருடன் வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இந்த விபரீத சம்பவத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

 
 

 

Tags :

Share via