15 வயது சிறுமியை திருமணம் செய்து குழந்தை பெற்ற இளைஞர் கைது...
மும்பையில் உள்ள ஜெஜெ மருத்துவமனையில் கர்பிணியாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பெண்ணின் வயதை சந்தேகித்த மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயதை அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளனர்.
அப்போழுது அவர்கள் 20 வயது என்று கூறியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் பெற்றோர்கள் மீது சந்தேகம் வலுத்த நிலையில் அவரின் ஆதார் அட்டையை சரிபார்த்தபோது அவர் 2006 பிறந்த 15 வயது சிறுமி என தெரியவந்தது . இதனையடுத்து மருத்துவர்கள் அருகில் இருந்த அக்ரிபாதா காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் 15வயது சிறுமியை 27 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், குடும்ப வறுமை காரணமாக அந்த சிறுமியின் தாயார் 5 வகுப்பு வரை படித்த சிறுமியை பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அந்த சிறுமி மைனர் என தெரிந்தும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுள்ளதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக அக்ரிபாதா காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tags :