குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Admin / 19-11-2021 03:06:04pm
குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி-  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

 குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
   
பேரணாம்பட்டில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு  ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது.

'கனமழையின் காரணமாக வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, 4 குழந்தைகளும், 5 பெண்களும் உயிரிழந்தவர் செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்'.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via