பள்ளிச் சிறுமியை எரித்துக் கொன்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சீமான் வலியுறுத்தல்.

by Editor / 18-12-2021 12:55:38am
 பள்ளிச் சிறுமியை  எரித்துக் கொன்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய  சீமான் வலியுறுத்தல்.

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ் சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிஞ்சுக்குழந்தையை எரித்துக் கொன்ற இக்கோரச்செய்தி நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அக்குழந்தையின் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

குழந்தையைக் கொடூரமாகக்கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்து, கடும்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும், இக்கொடுமைகளை விளைவித்தக் கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

 

Tags :

Share via