2 மாதங்களாக 8 வயது சிறுமிக்கு 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை

by Admin / 08-02-2022 10:42:41am
 2 மாதங்களாக 8 வயது சிறுமிக்கு 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை

சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்பிகாபூர் பகுதியில் வசித்து வரும் கூட்டு குடும்பத்தில் 8 வயது சிறுமி இருந்துள்ளார். 

ஒருநாள் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்போது அவரை மருத்துவமனைக்கு பெற்றோர்கள்  அழைத்துச் சென்றுள்ளார். 

மருத்துவ பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட்து தெரியவந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அந்த வீட்டில் இருந்த 6 சிறுவர்கள் தினமும் ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி மொபைல் போனில் ஆபாச படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.
 
பார்த்ததது மட்டுமில்லாமல் அதனை செய்து பார்க்க அவர்கள் விரும்பி அதே குடும்பத்தைச் சேர்ந்த  8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். 

இது தொடர்பாக அந்த பெற்றோர்க்கு உறவினர்களுக்கும்  யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அந்த 7 பேரும் 6 முதல் 13 வயது நிரம்பியவர்கள் என்பதால் அவர்களை குழந்தைகள் ஆணையம் முன்பாக ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
 
மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via