மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கேண்டயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் க.அன்பழகனின் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags : MK Stalin paid floral tributes to the portrait of the late DMK General Secretary K. Anpalagan.