ரூ.1000 உரிமைத்தொகை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by Staff / 15-09-2023 12:06:52pm
ரூ.1000 உரிமைத்தொகை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மகளிர் உரிமைத் திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, இன்று சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தும் பணி நேற்றே பல இடங்களில் தொடங்கியிருந்தது. தொகை வங்கிக்கணக்கில் கிடைக்கப்பெற்ற பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் அனைத்து பயனாளிகளின் வங்கிக்கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும். ஒரே நேரத்தில் அனுப்பும் போது, தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டுவிடமால் இருக்கவே, நேற்றைய தினமே தொகை சிலரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்களின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த திட்டம் ஒரு சாதனை திட்டமாக தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via