ஏடிஎம் கார்டுகளை வழங்கிய முதலமைச்சர்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடும்பத் தலைவிகளுக்கான பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். இன்று சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக காஞ்சிபுரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இத்தொகை நேரடியாக வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
Tags :