சந்திரயான் 3 - திரவ எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு

by Staff / 14-07-2023 11:39:10am
சந்திரயான் 3 - திரவ எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக சந்திரயான் 3 விண்கலம் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் LVM-3 ராக்கெட்டில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திட எரிள்பொருள் நிரப்பப்பட்ட நிலையில், கிரையோஜனிக் டுக்கிற்கான எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், சந்திரயான் 3 விண்கலத்தை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via