by Staff /
05-07-2023
04:49:14pm
ஹரியானா மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்தார். துஷ்யந்த் சவுதாலா தலைமையில் நடைபெற்ற பல்வேறு துறைகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஹரியானாவில் உள்ள உணவகங்கள் இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும். இரவு உணவகங்கள் மூடுவதற்கு எந்த தடையும் இருக்காது என்று சவுதாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags :
Share via