தூத்துக்குடி பட்டாசு ஆலை வெடி விபத்து.. மேலும் ஒருவர் பலி

by Staff / 02-09-2024 11:46:44am
தூத்துக்குடி பட்டாசு ஆலை வெடி விபத்து.. மேலும் ஒருவர் பலி


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ராம்குமார் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர்களில் நாராயண பெருமாள் என்பவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via