65 வயது மூதாட்டி பலாத்காரம்.. பரிதாப பலி
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் பெடநதிபாடு பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று குடும்பத்தினர் வேலைக்குச் சென்றதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த பாலபர்த்தி மஞ்சு (21) என்ற இளைஞர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார். தொடர்ந்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Tags :