சாலை விபத்து: 4 பேர் பலி

by Staff / 15-09-2023 12:02:15pm
சாலை  விபத்து: 4 பேர் பலி

ஆந்திராவில் லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு வேனில் திரும்பியபோது கே.வி.பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via