உள்ளாடைக்குள் வைத்து ஹெராயின் கடத்திய பலே பெண்
உள்ளாடைக்குள் பிரத்யேக பகுதியை உருவாக்கி ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து ரயிலில் கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்ஸாம் நவ்காவ் மாவட்டத்தை சேர்ந்த அஸ்மரா காந்தன் (22) என்ற இளம்பெண்ணை கேரளாவின் திருச்சூர் ரயில் நிலைய பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். உள்ளாடைக்குள் பிரத்யேக பகுதியை உருவாக்கி அதற்குள் மறைத்து வைத்து ஹெராயின் கடத்தி வந்துள்ளார். இதனை மற்றொரு நபரிடம் ஒப்படைக்க ரயில் நடைமேடையில் காத்திருந்த போது சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர், போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
Tags :