ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 9 சதவீதம் உயர்வு

by Staff / 06-10-2022 02:27:22pm
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 9 சதவீதம் உயர்வு

மத்திய அரசின் அவசரக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் உதவி வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் பங்கு விலை உயர்ந்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு 1000 கோடி கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பங்கு விலை ஒன்பது சதவீதம் உயர்ந்தது.

இந்த பணமானது ஸ்பைஸ்ஜெட் கடனை அடைக்கவும் புதிய போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்கவும் உதவும் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை விமான சேவையை பலப்படுத்தும். விமான எரிபொருளை ஜிஎஸ்டியில் சேர்க்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ்ஜைட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் கூறுகையில், இது துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.இதற்கிடையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் அதிக பணம் திரட்டும் முயற்சியை தொடங்கியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூடுதலாக 200 மில்லியன் டாலர் கடனைத் திரட்ட முயற்சிக்கிறது.

 

Tags :

Share via