வயநாடு நிலச்சரிவு: மொத்தமாக அழிந்த கிராமம்
கேரளாவின் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இயற்கையின் கோர ருத்ரதாண்டவத்தில் மண்டகை என்ற கிராமம் இருந்த தடமே இல்லாமல் அழிந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட சில மணி நேரத்தில் இந்த பகுதியே நரகமாக மாறியிருக்கிறது. கொடூரமாக சிதைத்து கிடக்கும் மனித உடல்களை பார்க்கவே முடியவில்லை என கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
Tags :