பல மாநிலங்களில் கடும் பனி நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்ள்ளது
டெல்லி, பஞ்சாப், ஹரியானா ,உத்தர பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற பல மாநிலங்களில் கடும் பனி நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்ள்ளது.. குறிப்பாக, டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான பிரிவில் இருப்பதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. பார்வையை மறைக்கும் அளவிற்கு பல இடங்களில் மூடுபனி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் தாமதமாகலாம் அல்லது பாதிக்கப்படலாம் என்றும் இது ஜனவரி ஒன்பதாம் தேதி வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















