அசாமில் மோரிகான் மாவட்டத்தில் 5.1 ரிக்டர்அளவில் நிலநடுக்கம்
இன்று அதிகாலை 4 17 மணியளவில் அசாமில் மோரிகான் மாவட்டத்தில் 5.1 ரிக்டர்அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் அசாம், மேகலாய உள்பட பல வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டன .ஆனால் உடனடி உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கௌஹாத்தி, உள்ளிட்ட அசாமின் பல பகுதிகளிலும் மேகலாயரின் ஜில்லாங்கிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. இதுவரை எந்தவித உயிரிழப்பும் அல்லது சொத்து சேதம் குறித்த உடனடி தகவல்கள் இல்லை.
Tags :



















