சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்.

தமிழகம் முழுவதும் இன்று 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. இதில் இலகு வாகனங்கள் முதல் மிக கனரக வாகனங்கள் வரை ஒரு முறை செல்ல 10 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையிலும் இருமுறை சென்று வர 15 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையும் மாதாந்திர கட்டணத்தில் 310 ரூபாய் முதல் 1690 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
Tags :