மது கொலை வழக்கு: 13 பேருக்கும் ஏழாண்டு சிறை

by Staff / 05-04-2023 12:02:28pm
மது கொலை வழக்கு: 13 பேருக்கும் ஏழாண்டு சிறை

பாலக்காடு: அட்டப்பாடி பழங்குடி இளைஞர் மது கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும், 16வது குற்றவாளியான முனீருக்கு 3 மாத சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. பிப்ரவரி 22, 2018 அன்று, உணவுக்காக அரிசியைத் திருடியதாகக் கூறி, கும்பலால் பிடித்து தாக்கப்பட்டு மது கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

 

Tags :

Share via