நீலகிரி கனமழை பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

by Staff / 20-07-2024 03:12:06pm
நீலகிரி கனமழை பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட பொறுப்பு அமைச்சர், எம்.பி., ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து தேவையான உத்தரவுகளை அவர் வழங்கினார். எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து ஆய்வு செய்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via