சிக்னல் கொடுத்தது சந்திரயான் - இஸ்ரோ அறிவிப்பு

by Staff / 23-08-2023 12:57:39pm
சிக்னல் கொடுத்தது சந்திரயான் - இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த, விக்ரம் லேண்டரை இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும். சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via