தொடர் விடுமுறை வால்பாறையில் வாகன  நெரிசல்.

by Editor / 01-10-2023 11:41:10pm
தொடர் விடுமுறை வால்பாறையில் வாகன  நெரிசல்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது மலைகளின் இளவரசியாக திகழ்கிறது, இயற்க்கை சூழ்ந்த  பகுதியாகவும் தேயிலை பயிர் விளையும் பூமியாகவும் உள்ளது. இப்பகுதிக்கு இயற்கையை ரசிக்க  வெளி மாநிலங்கள், மற்றும் வெளி நாட்டினரும் இங்கு வந்து செல்கின்றனர். இதில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகமாக உள்ளது. இங்கு நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை பாயிண்ட், சோலையர் அணை, சக்தி தலைனார், நீரார் டேம், பாலாஜி கோவில், அக்காமலை,, தாவரவியல் பூங்கா,  போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்,மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு கூலாங்கல்ஆறுகளில் குளித்தும் செல்ஃபி எடுத்தும் சென்றவண்ணமுள்ளனர்.மேலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வாலபாரையில் வாகன நெரிசலும் உருவாகியுள்ளது.

 

Tags : மேலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வாலபாரையில் வாகன நெரிசலும் உருவாகியுள்ளது.

Share via