ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராபினுக்கு தொடர்பா?- காவல்துறை விசாரணை

by Staff / 07-07-2024 03:25:14pm
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராபினுக்கு தொடர்பா?- காவல்துறை விசாரணை

சென்னையைச் சேர்ந்த ரவுடி ராபின் கோவை சிறை வாசலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராபின், பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராபினை சென்னை அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via