3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டு தாய் பலி
மூன்று வயது சிறுவனின் தாய் தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டு பரிதாபமாக பலியானார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை என்றும் அது தவறுதலாக சுடப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஸ்பார்டன்பேர்க்கில் வசித்து வந்த கோரா லின் புஷ் என்ற 33 வயது பெண் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 194 குழந்தைகள் தற்செயலாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன
Tags :