சசிகலா புஷ்பாவீடு,கார் மீது தாக்குதல்-10 திமுகவினர் மீது வழக்கு.

by Editor / 23-12-2022 08:37:11am
 சசிகலா புஷ்பாவீடு,கார் மீது தாக்குதல்-10 திமுகவினர் மீது வழக்கு.

அதிமுக முன்னாள் எம்.பியும்,தூத்துக்குடி மாநகர முன்னாள் மேயராகவும் இருந்தவர் சசிகலா புஷ்பா. தற்போது பாஜகவின் கட்சியில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார்.இவரது  வீடு தூத்துக்குடியில் தபால் தந்தி காலனியில் அமைந்து உள்ளது. இங்கு திடீரென நேற்று வந்த மர்மக் கும்பல் வீட்டை அடித்து நொறுக்கியது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், முன்பக்கத்தில் இருந்த சேர்கள் ஆகியவை உடைத்து நொறுக்கப்பட்டன.

இதேபோல் வீட்டின் முன்பகுதியில் இருந்த சசிகலா புஷ்பாவின் கார் கண்ணாடியும் உடைத்து நொறுக்கப்பட்டது. சசிகலா புஷ்பா அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொள்ள சசிகலா புஷ்பா சென்று இருந்தார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி மர்மக்கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது.இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், இசக்கி ராஜா, திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 சசிகலா புஷ்பாவீடு,கார் மீது தாக்குதல்-10 திமுகவினர் மீது வழக்கு.
 

Tags :

Share via