மா்மமான முறையில் 34 ஆடுகள் உயிரிழப்பு போலீசாா் விசாரணை

by Staff / 08-01-2024 01:34:28pm
மா்மமான முறையில் 34 ஆடுகள் உயிரிழப்பு போலீசாா்  விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், சூரன்குடி கோகுல் நகரை சோ்ந்தவா் பொன்னாண்டி மகன் ராமு (65). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் 250க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்துள்ளாா். சூரன்குடி கிழக்கு கடற்கரை சாலையில், செந்தூா் மூா்த்தி என்பவரது காலியிடத்தில் நைலான் வலை கொண்ட ஆட்டுப் பட்டியும், குட்டி ஆடுகளுக்கு குடில் அமைத்தும் பாதுகாத்து வந்தாா்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் 34 குட்டி ஆடுகளை மட்டும் குடிலில் அடைத்துவிட்டு மற்ற 200க்கும் மேற்பட்ட பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். மேய்ச்சல் முடிந்து மாலையில் ஆட்டுப் பட்டிக்கு திரும்பியபோது குடிலில் அடைக்கப்பட்டிருந்த 34 குட்டி ஆடுகளும் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இது தொடா்பாக ராமு அளித்த புகாரின் பேரில் சூரன்குடி காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via