நெல்லையில் 387 நபர்களுக்கு அபராதம். விதிமுறையை மீறியதால் நடவடிக்கை

by Editor / 16-05-2021 04:45:17pm
நெல்லையில் 387 நபர்களுக்கு அபராதம். விதிமுறையை மீறியதால் நடவடிக்கை

 

நெல்லையில் ஊரடங்கை மீறியதாக காவல்துறையினர் 94 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. அதன்படி தற்போது புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நெல்லையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 94 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வைத்திருந்த 94 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முக கவசத்தை அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 387 நபர்களுக்கு அபராதத்தையும் காவல்துறையினர் விதித்துள்ளனர்.

 

Tags :

Share via