சோழர்களின் செங்கோல் பிரதமரிடம் அளிக்கப்படும்

by Staff / 24-05-2023 01:41:08pm
சோழர்களின் செங்கோல் பிரதமரிடம் அளிக்கப்படும்

சோழர்களின் செங்கோல் பிரதமரிடம் அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடியிடம் அளிக்கப்படும் என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் டெல்லியில் பிரதமரிடம் சோழர்களின் செங்கோலை ஒப்படைப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோழர்களின் செங்கோல் முன்னதாக ஆகஸ்ட் 14, 1947 அன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பயன்படுத்தப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு எதிர் காட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via