தெருவில் இறங்கி போராட தயார்: மகிளா காங்கிரஸ் தலைவர்

by Staff / 05-05-2024 12:51:46pm
தெருவில் இறங்கி போராட தயார்: மகிளா காங்கிரஸ் தலைவர்

மகளிர் போலீசாரை அருவருக்கத்த விதமாக பேசிய சவுக்கு சங்கருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றால் தெருவில் இறங்கி போராட தயாராக உள்ளோம் என்று தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பல தடைகளையும் இன்னல்களையும் கடந்து பெண்கள் காவல்துறையில் பணியாற்றுவதை நாம் கொண்டாட வேண்டும், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்கள் பணியாற்றுவதை கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். அதைவிடுத்து காவல்துறையில் உள்ள பெண்களையும், மூன்றாம் பாலினத்தவரையும், அருவருக்கத்தக்க விதமாக யூடியூபர் சங்கர் பேசியதை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்கு எதிராக தமிழக மகளிர் காங்கிரஸ், தெருவில் இறங்கிப் போராட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via